“நள்ளிரவு போன் கால்… சந்தேகப்பட்ட கணவன்… டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த மரண மாஸ் தீர்ப்பு…!!”

By Swetha on ஆனி 26, 2026

Spread the love

இன்றைய இந்திய சமூகத்தில் ஒரு பெண் மற்றொரு ஆணிடம் பேசக்கூடாது என்ற மனப்பான்மை இல்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. குடும்ப வன்முறை வழக்கு ஒன்றில், தனது மனைவியின் நடத்தையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அவரது செல்போன் அழைப்பு விவரங்களை பாதுகாத்து வைக்குமாறு கணவர் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை கூடுதல் அமர்வு நீதிபதி சுனாலி குப்தா திட்டவட்டமாக நிராகரித்தார்.

மற்றொரு நபரின் தனிப்பட்ட அழைப்பு விவரங்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி சுனாலி குப்தா தெரிவித்தார். ஒரு பெண் மற்றொரு நபருடன் பேசுகிறார் என்பதற்காகவே, அவர் முறையற்ற அல்லது ஒழுக்கக்கேடான உறவில் இருக்கிறார் என்று கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

   

மனைவியின் அழைப்பு விவரங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, கணவர் தரப்பில் எவ்விதமான வலுவான அல்லது நியாயமான காரணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக, மனைவியின் தனிஉரிமையைப் பாதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட கணவனின் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.