தோசை கரண்டியால் மனைவியை கொன்ற கணவன்.. குடிப்பழக்கத்தால் ஒரு உயிரே போச்சு… திருவாரூரில் அதிர்ச்சி..!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நிகழ்ந்த ஒரு துயர சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் காந்தி நகரைச் சேர்ந்த பரதன் – சுந்தரி தம்பதியினருக்கு இடையே, பரதனின் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலின் போது, ஆத்திரமடைந்த பரதன் தனது மனைவி சுந்தரியைத் தோசை கரண்டியால் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சுந்தரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.