தென் மாவட்ட விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியூட்டும் வகையில், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நீர் திறப்பின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 36,521 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெற்றுப் பயன்பெறவுள்ளன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் நோக்கில், அடுத்த 121 நாள்களுக்கு 6,086 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீரைத் தடையின்றித் திறந்துவிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். அதே வேளையில், டெல்டா பாசனத்திற்கான மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாதது குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்து வரும் சூழலில், தென் மாவட்ட அணைகளைத் திறக்க முதல்வர் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை இப்பகுதி விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…
தமிழ் திரையுலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் "சித்தப்பு" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சரவணன், 1990-களின் தொடக்கத்தில் முன்னணி…
1981 ஆம் ஆண்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 24 வயதான தீயணைப்பு வீரர் லாஸே குஸ்டாவ்சன் கோதன்பர்க்கில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில்…