கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் கவுடர் .30 வயதான இவர் கடந்த வாரம் தன்னுடைய நண்பரான தயானந்த் என்பவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணத்தை வாங்கிய போது ஏழு நாட்களில் திருப்பி கொடுத்துவிடுவதாக மஞ்சுநாத் உறுதி அளித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பணத்தை கொடுக்குமாறு மஞ்சுநாத்திடம் தயானந்த் நேற்று இரவு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த தயானந்த் தன்னிடமிருந்து அரிவாளை எடுத்தும் மஞ்சுநாத்தை வெட்டி விட்டு ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மஞ்சுநாத் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தயானந்த் காவல் நிலையத்தில் சரணடைந்து தன்னுடைய நண்பனை கொலை செய்தது ஒப்புக்கொண்டார். அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
