திரிசூலி பாஜாரில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நான்கு வீடுகள் வரிசையாக அடித்துச் செல்லப்பட்டன. அந்த இடத்திலேயே, கழுத்துப்பட்டியோடு கூடிய கருப்பு-வெள்ளை நிற நாய் ஒன்று அங்கிருந்து நகர மறுத்து நிற்கிறது. அரை டஜன் ஜேசிபிக்களும் மீட்புப் பணியாளர்களும் சுற்றியுள்ள மரக்கட்டைகள், வண்டல் மண் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அது தொடர்ந்து அதே சேற்றுப் பகுதியிலேயே நின்றுகொண்டிருக்கிறது.
அப்பகுதிக்கு வரும் புதிய மனிதர்களைக் கண்டு அந்நாய் எவ்வித எதிர்வினையும் ஆற்றுவதில்லை. அது தன் வாலைக்கூட ஆட்டாமல், முன்பிருந்த வீடுகளில் ஒன்றின் முகப்பு வாசல் பகுதிக்கு மீண்டும் மீண்டும் திரும்பி வந்தபடியே இருக்கிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் பிக்ரம் தாபா TOI நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் பிஸ்கட்டுகளைக் கொடுத்து, பலவிதமான செல்லப் பெயர்களைச் சொல்லி அதை அழைக்க முயற்சி செய்தோம். ஆனால், அது தன் தலையைக்கூட திருப்பிப் பார்க்கவில்லை” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.
