தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த பல முக்கியப் பிரமுகர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகள் வைஷ்ணவி, திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி மற்றும் நடிகர் போஸ் வெங்கட் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் தத்தமது தொகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றி வந்த போதிலும், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் கட்சியின் உள்கட்சி சமன்பாடுகள் காரணமாக இவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறிப்பாக திவ்யா சத்யராஜ் கடந்த ஓராண்டிற்கும் மேலாகச் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்ததோடு, குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார். அதேபோல், ராஜீவ் காந்தி தனது ஆளுமையான பேச்சால் சமூக வலைதளங்களில் திமுகவிற்கு ஆதரவாகப் பெரிய அலையை உருவாக்கியவர். போஸ் வெங்கட் நீண்டகாலமாகத் திமுகவின் மேடைப் பேச்சாளராகவும் தீவிரத் தொண்டராகவும் இருந்து வருகிறார்.
இதனால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது அவர்களின் ஆதரவாளர்களிடையே சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கட்சியின் வெற்றிக்காகத் தொடர்ந்து பணியாற்றுமாறு தலைமை அறிவுறுத்தியுள்ளது. வரும் காலங்களில் இவர்களுக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம் அல்லது மாற்றுப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
