“ஒரே ஒரு மேயர் சீட் ஜெயிச்சு காட்டுங்க உதயநிதி..!” – தவெக ஆதவ் அர்ஜுனா விடுத்த நேரடி சவால்..!  எம்.எல்.ஏ பல்லவிக்கு நடந்த அவமதிப்பால் ஆவேசம்…!!

By Swetha on ஆனி 6, 2026

Spread the love

விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான களப்பணிகளை தவெக ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அவர் அறிவித்தார். மேலும், இந்தத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்வியானது முன்னெப்போதும் இல்லாத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், சாதாரண வேட்பாளர்களிடம் திமுகவின் முக்கியத் தலைவர்கள் தோற்றுப் போவதற்குக் காரணம் அக்கட்சியின் தலைவர் அண்ணன் விஜய் தான் என்று பெருமிதத்துடன் பேசினார்.

திமுகவின் தற்போதைய செயல்பாடுகளை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, இளைஞர்களுக்கான கூட்டம் என்ற பெயரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை வைத்து திமுக ஏமாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டினார். தவெக தலைவர் விஜய் அறிவித்த “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற இலக்கை சாத்தியமாக்கிக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் போதை கலாச்சாரம் பரவியுள்ளதாகச் சாடினார். குறிப்பாக, “செந்தில் பாலாஜியை திருடச் சொல்லி அந்தப் பணத்தை மகனுக்கும், மருமகனுக்கும் கொடுத்தது யார்? ஸ்டாலின் அவர்கள் தான்” என்று மேடையில் மிக அடுக்கான நேரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

   

சென்னை மேயர் பிரியா, தவெகவின் 8 மாத கர்ப்பிணி சட்டமன்ற உறுப்பினர் பல்லவியை ஒரு பொது நிகழ்ச்சியில் அவமதித்ததாகக் கூறி அதற்கு ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களை திமுகவினர் பணி செய்ய விடுவதில்லை என்று சாடிய அவர், திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி சவால் ஒன்றையும் விடுத்தார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், சென்னையின் 25 மேயர் பதவிகளில் ஒரே ஒரு இடத்திலாவது திமுக வெற்றி பெற்று நிரூபித்தால், அக்கட்சியை யாராலும் அசைக்க முடியாது என்பதைத் தான் ஒப்புக்கொள்வதாகக் கூறி, தவெகவின் தேர்தல் வேலைகள் தீவிரமாகத் தொடங்கிவிட்டதை உறுதிபடத் தெரிவித்தார்.