actor Sivakarthikeyan

தாய்கிழவி படத்தில் இடம்பெற்ற அந்த ஒரு வசனம்… விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவே வைக்கப்பட்டதா? – சிவகார்த்திகேயன் செய்த யுக்தி!

By Elango on மாசி 26, 2026

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஒரு மருத்துவமனை காட்சியில் பேசும்போது நடிகர் சிங்கம்புலி வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு கட்சியில் இருப்பதாக சொல்வார். அப்போது தன்னை மக்கள் நீதி மய்யம் என்பார். அடுத்து பேசும் அவரது தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலசரவணன், தவெக கட்சியில் கவுன்சிலராக இருப்பதாக சொல்வார்.

கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோதும் சூழல் ஏற்பட்ட நிலையில் தளபதி ரசிகர்கள், சிவகார்த்திகேயனை இணையத்தில் கண்டபடி விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அப்படி 2 படங்களும் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. ஏனென்றால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. அப்படி தன்னை திட்டிய தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தவே தாய்கிழவி படத்தில் தவெக கட்சியை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கொண்டு வந்துள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.