குடிபோதையில் சிறுமியோடு… போலீஸ் ஜீப் மேல் ஏறி அட்டகாசம்… “பையனுக்கு ஒரே ரொமான்ஸ் தான்” வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on புரட்டாதி 22, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஒரு இளம் தம்பதியினர் போலீஸ் ஜீப்பின் கூரையில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமையன்று ராம்புரா காவல் நிலைய எல்லைக்குள் 22 வயது இளைஞர் ஒருவர் குடிபோதையில் தனது காதலியான சிறுமி ஒருவரோடு இருந்துள்ளார். இரவு போலீஸாரைப் பார்த்ததும் தம்பதியினர் ஓடத் தொடங்கினர். போலீசார் சந்தேகப்பட்டு அவர்களைப் பின்தொடர்ந்தனர். 

பின்னர் அந்த ஜோடி கைது செய்யப்பட்டனர். இருப்பினும், போலீஸ் ஜீப்பில் உட்காருவதற்கு பதிலாக, அவர்கள் வாகனத்தின் கூரையில் ஏறினர். 10 நிமிடங்கள் அவர்கள் ரகளை செய்தனர்.  இதுகுறித்து வைரலான வீடியோவில், 17 வயது சிறுமி, அந்த நபரை போலீஸ் ஜீப்பின் கூரையிலிருந்து கீழே  இறக்கி விடுகிறேன் என்றும், தன்னையும் 22 வயது இளைஞரையும் கைது செய்ய வேண்டாம் என்றும் அவள் கெஞ்சினார். பின்னர் அந்த ஜோடியை போலீசார் இழுத்துச் சென்று, அந்த இளைஞரை கைது செய்தனர். போலீஸ் வாகனத்தில் ஏறி குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக 22 வயது இளைஞருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.