சமூக வலைதளங்களில் ‘புனீத் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் பிரகாஷ் குமார், சாக்கடை நீரில் குளித்து, அதில் உணவை நனைத்து உண்ணும் அருவருப்பான வீடியோ ஒன்று வெளியாகி இணையவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய செயல்களைச் செய்து கவனம் ஈர்க்கும் இவர், இந்த முறை எல்லை மீறிச் சென்றிருப்பது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அந்த வீடியோவில், புனீத் ஒரு அசுத்தமான சாக்கடை கால்வாயில் இறங்கி, அந்த அழுக்கு நீரைத் தன் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்கிறார். அதுமட்டுமின்றி, தான் வைத்திருக்கும் உணவை அந்தச் சாக்கடை நீரில் நனைத்து எந்தவிதத் தயக்கமுமின்றி உண்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “வியூஸ்களுக்காக (Views) இப்படியா செய்வது?” என்றும், “இது போன்ற செயல்கள் சமூகத்திற்குத் தவறான முன்னுதாரணமாக அமையும்” என்றும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
मानती हूं सोशल मीडिया influencer क़ा दौर है, और लोग अच्छी कमाई कर लेते हैँ पर…….
इस हद तक जाकर नाले में डुबकी लगाना और गंदे पानी का सेवन करना 🤮… ये तो सरासर जाहिलियत है, कहीं कोई ऐसी वैसी बीमारी हो गयी तो लेने के देने भी पड़ सकते है… pic.twitter.com/OfbT2F2vdW
— Nalini (@Nalini9452) April 28, 2026
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் இது வெறும் நகைச்சுவை என்றும், அவர் தனது பாணியில் மக்களை ரசிக்க வைக்க முயல்கிறார் என்றும் கூறுகின்றனர். ஆனால் பெரும்பான்மையான மக்கள், இது போன்ற சுகாதாரமற்ற செயல்கள் நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என்றும், இத்தகைய உள்ளடக்கங்களை (Content) ஊக்குவிக்கக் கூடாது என்றும் சாடி வருகின்றனர். எது எப்படியோ, புனீத் சூப்பர் ஸ்டாரின் இந்த ‘பகீர்’ செயல் தற்போது இணையத்தில் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
