அரசியலில் பெரும் பரபரப்பு..! எஸ்பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு… நீலகிரியில் பதற்றம்…!

By Soundarya on தை 26, 2026

Spread the love

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேனாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவக்குமார் (45), நேற்று (ஜனவரி 25, 2026) தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

பலத்த காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை கோத்தகிரி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிவக்குமார் ஊட்டியில் தேயிலை எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.