CINEMA
மறைந்த கணவரின் நினைவுகளை மறக்க முடியாமல் நடிகை ஸ்ருதி வெளியிட்ட வீடியோ…! கண் கலங்கும் ரசிகர்கள்…!
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நாதஸ்வரம் சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அதன் பிறகு ஒரு சில மாதங்களில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த பிறகு ஸ்ருதி தன்னுடைய கணவரோடு எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்துக்கு கார்டியாக அரெஸ்ட் என்று சொல்லப்படும் இருதயம் முடக்கம் ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார்.
இந்தச் செய்தி சின்னத்திரை திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் ஸ்ருதியின் கணவர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கணவர் உயிருடன் இருக்கும் பொழுது கையோடு கை சேர்த்து எடுத்துக் கொண்ட ஆர்ட் ஒன்றை வைத்து உங்களுடைய கை எப்பொழுதும் என் கைக்குள் தான் இருக்கும் எனக் கூறி கணவரை நினைத்து உருக்கமாக வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு ஆறுதல்களை கமெண்ட் பக்கத்தில் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram