Connect with us

CINEMA

‘குழந்தை பிறந்தும் பாக்கல.. நகைய அடகு வைச்சு தான் வீட்டு வாடகை குடுத்தேன்’… மறைந்த நடிகர் மாரிமுத்துவின் வாழ்க்கையில் இத்தனை சோகமா..?

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.  நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

   

இவர் கடந்த 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாரிமுத்துவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை. இதைத்தொடர்ந்து  ஒவ்வொரு நாளும் மறைந்த நடிகர் மாரிமுத்து குறித்து ஒரு செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் மாரிமுத்து தனது மனைவியுடன் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பழைய பேட்டியானது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் ,  ‘ ‘குழந்தை பிறந்தும் பாக்க போக முடியல என்றும்,  நகைய அடகு வைச்சு தான் வீட்டு வாடகை குடுக்க வேண்டிய நிலைமை என்றும்’ தனது வாழ்க்கையில் கஷ்டமான தருணங்களை பகிர்ந்து கொண்டார்.  இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by IBC Mangai (@ibcmangai)

author avatar
Continue Reading

More in CINEMA

To Top