Connect with us

CINEMA

‘நான் அதுக்கு செட் ஆக மாட்டேன்’… திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேட்டியளித்த நடிகை கெளசல்யா… 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கௌசல்ய. இவர் எப்போதுமே சிரித்த முகமாகவே இருப்பார். கௌசல்யாவின் சொந்த பெயர் அவருடைய வீட்டில் வைத்த பெயர் கவிதா தான். அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க எனும் திரைப்படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் கௌசல்யா என மாற்றிக் கொண்டார்.

   

முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக இவர் விஜய் கூட இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த நிலையில், ஒரு சில வருடங்களில் விஜய்க்கு அக்காவாகவும் அண்ணியாகவும் நடிக்க தொடங்கி விட்டார். அதுமட்டுமின்றி, சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்தாலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில், திடீரென சினிமா உலகை விட்டு இவர் சில நாட்கள் விலகியே இருந்திருக்கிறார். அப்போது வெளியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகும் வகையில் தான் இருந்திருக்கிறது. உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறியிருந்தார்.

இவர் திடீரென உடல் எடை கூடுவதற்கு காரணம் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் இவர் எடுத்த மெடிசின் தானாம். அதனால் உடல் எடை திடீரென அதிகரித்து விட்டதாம். அந்த நேரத்தில் இவர் 105 கிலோ வரைகூடியிருந்தார். தற்பொழுது இவர் பழைய நிலைக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் பிசியாக நடித்து வருகிறார். ஆனால் தற்பொழுது வரை நடிகை கௌசல்யா திருமணம் செய்து கொள்ளவில்லை.  இதற்கான காரணத்தை அவரே கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)

Continue Reading

More in CINEMA

To Top