“யாசகம் பெறும் முதியவர் கூப்பிட்டார்”…. காதல் பட சரண்யா ஓபன் டாக்…!!

By admin on புரட்டாதி 9, 2023

Spread the love

இந்திய நடிகையான சரண்யா நாக் பேராண்மை, மழைக்காலம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். முன்னதாக கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் சரண்யா நாக் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

சமீபத்தில் சரண்யா நாக் ஒரு பேட்டியில் கூறியதாவது, சினிமாவிற்கு நடிக்க வந்த காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்ட சரண்யா கோயம்பேட்டில் இருக்கும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். பசி அதிகமாக இருந்த நாட்களில் அந்த கோவிலில் மதியம் கொடுக்கும் அன்னதானத்தை சரண்யா வாங்கி சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து இரண்டு நாட்கள் கோவிலுக்கு சென்று சரண்யா அன்னதானம் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

   

 

அடுத்த நாள் விசேஷம் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாப்பாடு கிடைக்காதோ என சரண்யா நினைத்த நேரம் யாசகம் பெறும் முதியவர் ஒருவர் தனக்கு அருகே ஒரு இடம் பிடித்து சரண்யாவை அமர்ந்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். இந்த சம்பவத்தை புன்சிரிப்புடன் நடிகை சரண்யா நினைவு கூர்ந்தார்.