ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

By Swetha on புரட்டாதி 18, 2026

Spread the love

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ் ரோட்ஸ் அருகே பகல் நேரத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் அவர் தனது சோளக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் அவரை கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றார். இதில் ஹரிபாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜாக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி யூடியூபரான வைஷ்ணவி இந்த ஆண்டின் தொடக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, ஹரிபாபு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹரிபாபுவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவ தொடர்பாகக் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

   

https://twitter.com/nextminutenews7/status/2100836975653879899/video/1

   

தற்போது காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து, குற்றவாளியைப் பிடிக்கச் சிறப்புப் படைகளை அமைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் வைஷ்ணவியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.