“2011 பழிவாங்கல்… 2026-ல் மெகா கூட்டணி?”… ஆந்திராவை அலறவிடும் காங்கிரஸின் ரகசிய வியூகம்…. NDA-வுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…..!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

தென் மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசம் தவிர மற்ற பகுதிகள் காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் வசம் உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆந்திராவில் முட்டுக்கட்டை போடும் வியூகமாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை ‘இண்டியா’ (INDIA) கூட்டணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கிய ஜெகன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸுடன் கைகோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா பொறுப்பில் இருப்பதும், இருவருக்கும் இடையே நிலவும் அரசியல் மோதலும் இந்த முடிவுக்கு முக்கியச் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.