“வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் மீது பாய்ந்த கார்…” தூக்கி வீசப்பட்டு படுகாயம்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

By Devi Ramu on புரட்டாதி 3, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டத்தில் உள்ள ராய்கர் சாலையில், வேலை முடிந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளுக்குச் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த மாருதி சுசுகி பிரீசா கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பலமாக மோதியது.

காரின் மோதிய வேகத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் அலறியடித்தபடித் தூக்கி வீசப்பட்டனர். இந்த நடுக்கத்தை ஏற்படுத்தும் விபத்தின் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகி, தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரின் பதிவு எண்ணைக் கண்டறிந்து, காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபரைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.