டார்ஜிலிங்கைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது ஹனிமூன் பயணத்திற்காக ரயிலில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பயணத்தின் போது இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிச் சென்றுகொண்டிருந்த வேளையில், ரயிலில் பயணித்த மற்றொரு இளைஞருடன் அவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் சாதாரணப் பேச்சாகத் தொடங்கிய உரையாடல், நேரம் செல்லச் செல்ல மனைவிக்கும் அந்த புதிய வாலிபருக்கும் இடையே அதிக நெருக்கத்தை உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடக்கத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத கணவன், போகப்போக மனைவியும் அந்த நபரும் எல்லை மீறி நெருக்கம் காட்டுவதைக் கண்டு பெரும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தார். தன் ஹனிமூன் பயணத்திலேயே மனைவியின் இந்த மாற்றத்தைக் கண்ட கணவன் செய்வதறியாது திகைத்து நின்ற இச்சம்பவம், சமூக வலைத்தளங்களில் திருமண உறவில் இருக்க வேண்டிய நம்பிக்கை மற்றும் எல்லைகள் குறித்தான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
