தமிழக பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கும் காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. தேர்வுகள் முடிந்த கையோடு, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் ஓய்வை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளோ அல்லது கூடுதல் பாடங்களோ நடத்தக் கூடாது என்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
