“இனி எல்லாமே எடப்பாடி தான்”…. திடீர் யு-டர்ன் அடித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்… அதிர்ச்சியில் வேலுமணி, சி.வி.சண்முகம்….!

By Nanthini on ஆவணி 29, 2026

Spread the love

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும், தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியுள்ளனர். சட்டசபையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்து, பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரைத் தொடர்ந்து, மேலும் பலர் அதிமுகவில் இருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலை சாதகமாக்கி எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் எடப்பாடிக்கு எதிராக ஒரு வலுவான அதிருப்தி அணியை உருவாக்க முயற்சித்தனர். ஆனால், இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்கப்பட்ட சூழல் உள்ளிட்ட அரசியல் மாற்றங்களால், அதிருப்தியில் இருந்த பல எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது இவர்க இருவருக்கும் பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.

முன்னதாக, தவெக தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் எடப்பாடிக்கு எதிராகத் திரும்பினர். எனினும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் இவர்கள் இணைந்தபோதும், அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் மீண்டும் போர்க்கொடி தூக்கினர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இவர்களின் எதிர்ப்பை சற்றும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தார். இதற்கிடையே, அதிருப்தி முகாமில் இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி சமீபத்தில் சேலத்தில் எடப்பாடி தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அதேபோல் கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்களும் அமைதி காக்கத் தொடங்கியதால், அதிருப்தி அணி மெல்ல கரையத் தொடங்கியுள்ளது.

   

இதனிடையே, சட்டசபையில் தங்களை அதிமுகவின் அதிருப்தி அணியாகக் காட்டிப் பேசும் முயற்சியிலும் வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு தீவிரமாக ஈடுபட்டது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, அமைச்சர் செங்கோட்டையனுடன் சேர்ந்து சபாநாயகர் அறைக்குச் சென்ற இவர்கள், அதிருப்தி அணியாகத் தங்களுக்குச் சபையில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நடவடிக்கை தவெகவுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சட்டசபையில் இவர்களின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

   

சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகிய இருவருக்கும் பேசுவதற்குப் பெரிதாக அனுமதி அளிப்பதில்லை. குறிப்பாக, கவன ஈர்ப்புத் தீர்மானங்களின் போது இவர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால், இருவரும் తీవ్ర அப்செட்டில் உள்ளனர். ஒருபுறம் சட்டசபையில் சபாநாயகரின் அனுமதி கிடைக்காதது, மறுபுறம் தங்களுடன் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எடப்பாடி பக்கம் சாய்வது என இருமுனைத் தாக்குதலால் அதிமுகவின் அதிருப்தி தலைவர்கள் அரசியல் களத்தில் தனித்து விடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.