BREAKING: பட்டப்பகலில் விசிக முக்கிய தலைவர் கொலை…. சற்றுமுன் பெரும் பரபரப்பு…..!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

சென்னை தாம்பரம் அருகே உள்ள திருநீர்மலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி அமைப்பாளர் அன்பழகன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.

பட்டப்பகலில் அரங்கேறிய இந்தத் துடில சம்பவத்தால் அப்பகுதியே உறைந்துபோயுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் பீதியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் படுகொலை விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ள நிலையில், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.