ஐயோ கடவுளே… திருமணத்தில் மகிழ்ச்சியாக DJ பாட்டுக்கு நடனமாடிய… இளைஞர் திடீர் மரணம்… நெஞ்சை பதற வைக்கும் சோகம்…!!

By Swetha on ஆவணி 27, 2026

Spread the love

கர்நூல் மாவட்டம் எம்மிகனூரில் உள்ள கங்கணம்மா மசூதி அருகே ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணக் கொண்டாட்டத்தின் போது, டி.ஜே. இசையில் நடனமாடிக்கொண்டிருந்த போயா வெங்கடேஷ் (22) என்ற இளைஞர் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

இறந்தவருக்குத் திருமணமாகி மூன்று மாதங்களே ஆவதால், அவரது குடும்பத்தில் பேரிடி விழுந்தது போன்ற சோக சூழல் ஏற்பட்டுள்ளது. இத்துயரச் செய்தி உறவினர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.