மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 இவர்களுக்கு ரத்து ஆகிறது… அரசு அறிவுப்பு…!

By Swetha on ஆவணி 20, 2026

Spread the love

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்க கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1,000 வழங்கி வரப்படும் நிலையில், இத்தொகையை ரூ 2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன. அதேவேளையில், இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பு மற்றும் இதர அரசு தகுதி நிபந்தனைகளை மீறி, தகுதியற்ற சிலர் இத்தொகையைப் பெற்று வருவது அரசு நடத்திய முதற்கட்ட கள ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, திட்டத்தை முறைப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பிரதிநிதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்களா என்பது தீவிரமாக சரிபார்க்கப்பட்டு வருகிறது. தகுதி விதிமுறைகளுக்குப் புறம்பாக நிதியுதவி பெறும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை வருவாய்த்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை இணைந்து விரைவுபடுத்தியுள்ளன.