அடேங்கப்பா…. அன்று கோவையில் பிரியாணி… இன்று டோக்கியோவில் மிச்செலின்… ஒரே ஒரு தட்டு பிரியாணி செய்த ‘மாஸ்’ சம்பவம்…!

By Swetha on ஆவணி 4, 2026

Spread the love

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது வாழ்க்கையையே முற்றிலும் மாற்றியமைத்தது. கோவை பிரியாணியின் தனித்துவமான சுவை, நறுமணம் மற்றும் மசாலாப் பொருட்களின் சேர்க்கை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர், இந்தச் சுவையைத் தனது சொந்த நாடான ஜப்பானிய மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானித்தார்.

இந்த சுவை அனுபவத்தைத் தொடர்ந்து, பிரியாணி செய்யும் முறையை முறைப்படி கற்றுக் கொண்ட ஒசாவா, ஜப்பான் திரும்பியதும் டோக்கியோவில் தென்னிந்தியப் பாணி பிரியாணிக்கான பிரத்யேக உணவகம் ஒன்றைத் தொடங்கினார். தமிழகத்தின் பாரம்பரிய முறையில், சீரகச் சம்பா அரிசி மற்றும் நறுமண மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி, அதன் அசல் சுவை மாறாமல் ஜப்பானியர்களுக்கு பிரியாணி சமைத்துப் பரிமாறினார். இதனால் அவரது உணவகம் குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

   

உணவின் தரம், மாறாத பாரம்பரிய சுவை மற்றும் அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, இவரது உணவகத்திற்கு உலகப் புகழ்பெற்ற ‘மிச்செலின்’ அங்கீகாரம் கிடைத்தது. கோயம்புத்தூரில் சுவைத்த ஒரு தட்டு பிரியாணியின் மூலம் ஈர்க்கப்பட்டு, இன்று ஜப்பானில் தென்னிந்திய உணவுப் கலாச்சாரத்தைப் பரப்பி மிச்செலின் விருது வரை சாதனை படைத்த தகமாசா ஒசாவாவின் பயணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.