“துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்…!” – மருத்துவமனையில் கதறிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்…! தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு…!!

By Swetha on ஆடி 20, 2026

Spread the love

சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். கைதைத் தொடர்ந்து அவரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சர்க்கரை நோயாளியான மார்க்கண்டேயனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து விசாரணை தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

   

விசாரணையின் நடுவே, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, மார்க்கண்டேயன் அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து கூச்சலிட்டார். அப்போது “போலீசார் துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டுவதாக” அவர் சத்தமிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உஷாரான போலீசார் அவரைத் தடுத்து விரைவாக மருத்துவமனைக்குள்ளே அழைத்துச் சென்றனர்.