SP-க்கே தெரியல.. ஆனா 5 நிமிஷத்துல செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிஞ்சது…. போட்டுடைத்த அமைச்சர் CTR….!

By SATHISH R on ஆடி 11, 2026

Spread the love

கரூர் சம்பவத்தின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே (SP) தெரியாத ஒரு விஷயம், அடுத்த ஐந்தே நிமிடங்களில் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிந்தது என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மிகக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். “அவர் என்ன அரசு மருத்துவமனைக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கி, இதற்காகவே காத்துக் கொண்டிருந்தாரா?

அவரால் எப்படி இவ்வளவு சீக்கிரம் அங்கு வர முடிந்தது எனத் தன் சந்தேகத்தை வெளிப்படுத்திய அவர், ராஜீவ் காந்தி மரணமடைந்த அன்று கலைஞர் கருணாநிதியின் பொதுக்கூட்டம் திடீரென ஏன் ரத்து செய்யப்பட்டது என்ற விடை தெரியாத மர்மக் கேள்வி இன்றுவரை நீடிப்பதைப் போலவே, இந்த கரூர் துயர சம்பவத்தின் பின்னணியிலும் பல மர்மங்கள் ஒளிந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.