விஞ்ஞானிகள் பூமிக்கு மிக அருகில், அதாவது சுமார் 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வரும் புதிய ‘சூப்பர் எர்த்’ கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், பூமியை விட சுமார் இரண்டு மடங்கு பெரியதாகும். பால்வெளி விண்மீன் மண்டலத்தின் ஒட்டுமொத்த விட்டத்தோடு ஒப்பிடுகையில், இக்கிரகம் பூமிக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு முடிவுகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கிரகத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இது தனது நட்சத்திரத்தின் “உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்” அமைந்துள்ளது. இதனால் அங்கு வெப்பநிலை மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்காது. மேலும், இக்கிரகம் தனது நட்சத்திரத்தில் இருந்து பெறும் வெப்பக் கதிர்வீச்சானது, பூமி சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தில் சுமார் 90 சதவீதம் ஆகும். இந்தச் சாதகமான சூழலால், கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பதற்கும், உயிர்கள் உருவாவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்வதை உறுதி செய்ய “வளிமண்டலம் இருக்கிறதா?” என்ற முக்கிய கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இக்கிரகம் எனப்படும் எல்லைப் பகுதியில் இருப்பதால், அதன் ஈர்ப்பு விசை வளிமண்டலத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போதுமானதா என்பதில் இன்னும் தெளிவில்லை; செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் சூரிய கதிர்வீச்சால் அழிந்தது போல இங்கும் நடந்திருக்கலாம் என்ற ஐயமும் உள்ளது. எனவே, வரும் காலங்களில் தீவிர ஆய்வுகள் மூலம் இங்கு வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, உயிர்கள் மற்றும் தண்ணீர் இருப்பதற்கான அடுத்தகட்ட தேடல் தொடங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
