“எனக்குத் தெரியாம ஏன் செஞ்சீங்க?”…. இனிமே தொலைச்சிடுவேன்… உதயநிதியைப் போட்டுத் தாக்கிய ஸ்டாலின்… அறிவாலயத்தில் நள்ளிரவில் நடந்த அவசர மீட்டிங்….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அறிவாலய வட்டாரங்கள் கசிந்துள்ள தகவல்களின்படி, இந்த விவகாரம் குறித்து உதயநிதி, சபரீசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்; அப்போது, “எனக்குத் தெரியாமல் ஏன் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டீர்கள்? குறுக்கு வழிகளில் யோசிப்பதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; இபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வராக்குவதோ அல்லது தவெக-வின் அரசியல் நகர்வுகளைக் கவிழ்ப்பதோ நம்முடைய வேலை அல்ல” என்று ஸ்டாலின் மிகவும் கோபமாகக் கடிந்து கொண்டதாக அரசியல் தளம் பரபரப்பாகப் பேசி வருகிறது.