2027 பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்… விரல் ரேகை கட்டாயம்…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் ₹300 கோடி நிதியை ஒதுக்கி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இம்முறை பயனாளர்களைக் கவரும் வகையில் முற்றிலும் புதிய வடிவமைப்புகளில் இந்த வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நலத்திட்ட உதவிகள் இடைத்தரகர்களின்றி தகுதியான அனைத்துப் பயனாளிகளுக்கும் முறைகேடின்றி முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், ரேஷன் கடைகளில் விரல் ரேகை (Biometric) பதிவு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்புப் பொங்கல் பரிசுப் பொருட்களை எவ்விதத் தடையுமின்றிப் பெற்றுக்கொள்ள ஏதுவாக, இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் உடனே தங்களது ரேஷன் கடைகளுக்குச் சென்று விரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.