அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்துக் சிபிஎம் (CPM) மூத்த தலைவர் பெ.சண்முகம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு கட்சி மாறுவது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் பண்பாடு என்பதைத் தவெக தலைமையிடம் சிபிஎம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “எம்.எல்.ஏ-க்கள் தாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்வதை எங்களால் எப்படித் தடுக்க முடியும்” என்று தவெக தலைமை அளித்த விளக்கத்தையும் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், அவ்வாறு வருபவர்களைத் தவெகவில் இணைத்துக் கொள்வது கட்சித் தாவலை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஒரு செயலாகவே அமையும் என்று தாங்கள் அப்போதே எச்சரித்ததாகவும், தற்போதும் அதே நிலை தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றும் பெ.சண்முகம் நேரடியாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
