திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரபல நடிகை த்ரிஷா களம் காண வாய்ப்புள்ளதாக ஒரு முன்னணி வார இதழில் செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியில் தவெகவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கணித்துள்ள கட்சித் தலைமை, தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள த்ரிஷாவை வேட்பாளராக நிறுத்தினால் அது கூடுதல் பலமாக அமையும் என தீவிரமாகப் பரிசீலித்து வருகிறதாம்.
மேலும், அவருக்கு கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி அரசியல் நகர்வுகளின் காரணமாகவே, தவெக சார்பில் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் லாரன்ஸ், தற்போதைய இடைத்தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளார் என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
