மனுஷனா இவன்…? கொலை செய்த உடலை சமைத்து ‘பாஸ்தா’வுடன் சாப்பிட்ட சைக்கோ கொடூரன்… கேட்கவே நெஞ்சம் பதறுது…!

By SATHISH R on ஆனி 30, 2026

Spread the love

தான் கொலை செய்த பெண்ணின் உடல் பாகங்களைச் சமைத்து, பாஸ்தாவுடன் சேர்த்துச் சாப்பிட்டதாகப் பெருமை பேசிக்கொண்ட டேவிட் ஹார்க்கர் என்ற கொடூரக் குற்றவாளிக்கு, ஒன்பதாவது முறையாக பரோல் வழங்க அந்நாட்டு பரோல் வாரியம் மறுத்துள்ளது. கடந்த 1998-ஆம் ஆண்டு, பிரிட்டனின் டார்லிங்டன் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தாயான 32 வயது ஜூலி பேட்டர்சன் என்ற பெண் மர்மமான முறையில் காணாமல் போனார். தீவிரத் தேடுதலுக்குப் பிறகு, அவரது உடலின் ஒரே ஒரு பகுதி மட்டுமே காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இந்த கொடூரக் கொலையில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹார்க்கர், குறைக்கப்பட்ட பொறுப்புணர்வின் (Diminished responsibility) அடிப்படையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

   

இந்த வழக்கின் மிகவும் அதிர்ச்சியூட்டும் பின்னணி என்னவென்றால், ஜூலி பேட்டர்சனைத் திட்டமிட்டு கொலை செய்த ஹார்க்கர், அவரது தொடைப் பகுதியைத் துண்டித்து, வறுத்து, பாஸ்தா மற்றும் சீஸ் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டுள்ளார். இக்கொடூரச் செயலை அவன் தனது நண்பர்களிடமும், ஒரு மனநல மருத்துவரிடமும் எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி பெருமையாகக் கூறியுள்ளான். 1999-ல் அவனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவனது வயது 24. அவனுக்குக் கடுமையான மனநிலை பிறழ்வு மற்றும் மனநலக் குறைபாடுகள் இருந்த காரணத்தால், அவனைக் கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்க முடியாது என்று மனநல மருத்துவர்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

   

தற்போது 51 வயதாகும் ஹார்க்கர், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பரோல் கோரி விண்ணப்பிக்கத் தகுதி பெற்று வருகிறான். அவனது சிறைக்காலப் பின்னணியை ஆய்வு செய்வதற்கும், அவனை விடுவிக்கலாமா அல்லது பாதுகாப்பு குறைவான திறந்தவெளிச் சிறைக்கு மாற்றலாமா என்பதைத் தீர்மானிப்பதற்கும் இந்த மாதம் ஒன்பதாவது முறையாகப் பரோல் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சிறைக்குள் அவன் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கைக் குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும், அவனது அண்மைக்கால நடத்தை கணிசமாக மேம்பட்டுள்ளது என்றும் பரோல் வாரியத்தின் சட்டபூர்வ மறுஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இருப்பினும், இத்தகைய கொடூரமான மனப்பிறழ்வு கொண்ட ஒரு குற்றவாளியை வெளியில் விட்டால் பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை பரோல் வாரியம் தீர்க்கமாகக் கருத்தில் கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் அவனை விடுவிப்பதோ அல்லது திறந்தவெளிச் சிறைக்கு இடமாற்றம் செய்வதோ பாதுகாப்பானது அல்ல என வாரியம் தீர்மானித்துள்ளது. இதன் விளைவாக, டேவிட் ஹார்க்கரைத் தொடர்ந்து மூடிய சிறையிலேயே வைத்திருக்கவும், அவனது விடுதலையை நிராகரிக்கவும் காவல்துறை மற்றும் பரோல் வாரியத் தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது