குடும்ப அட்டைதாரர்களே உஷார்..! 35 கிலோ ரேஷன் கிடைக்காதா..? விதியில் புதிய மாற்றம்.. மத்திய அரசின் அதிரடி வரைவு..!!

By Swetha on ஆனி 27, 2026

Spread the love

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது. இந்த புதிய திருத்தத்தின்படி, ஏழைகளிலும் ஏழைகளாகக் கருதப்படும் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச மற்றும் மானிய விலை ரேஷன் உணவுப் பொருட்களின் அளவீட்டு முறையில் முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. தற்போதைய நடைமுறையின்படி, இந்தக் குடும்பங்களுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், குடும்பம் ஒன்றுக்கு மாதத்திற்கு தலா 35 கிலோ உணவு தானியங்கள் நிலையாக வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டு திருத்த வரைவு மசோதாவில், இந்த நிலையான 35 கிலோ ஒதுக்கீட்டு முறைக்கு பதிலாக, தனிநபர் அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த்யோதயா கார்டு வைத்துள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 7 கிலோ வீதம் உணவு தானியங்கள் வழங்கப்படும். இருப்பினும், ஒரு குடும்பத்திற்கான அதிகபட்ச வரம்பு 5 கிலோவாகவே தக்கவைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு நபர் அல்லது இருவர் மட்டுமே உள்ள சிறிய குடும்பங்களுக்கு தற்போதைய முறையினால் அதிகப்படியான தானியங்கள் கிடைப்பதைத் தடுத்து, விநியோகத்தை முறைப்படுத்தவே இந்த மாற்றம் செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

அதே நேரத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கு இந்த புதிய உச்சவரம்பு முறை பாதகமாக அமையலாம் என உணவு உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில், ஒரு குடும்பத்தில் 6 பேர் இருந்தால் புதிய கணக்கீட்டின்படி 42 கிலோ கிடைக்க வேண்டும், ஆனால் 35 கிலோ என்ற உச்சவரம்பால் அவர்களுக்குக் கூடுதல் பலன் கிடைக்காமல் போகும் எனச் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த புதிய சட்டத் திருத்த வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க ஜூலை 13, 2026 வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.