“மகன் திமுக” இதேபோல 2 வருஷம் கழிச்சி… அதை சொல்லி தவெகவில் இருந்து வெளியேருவாங்க… முன்னாள் மதிமுக பிரமுகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சாடல்..!!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

மதிமுக திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ள அரசியல் சூழலில் , முன்னாள் மதிமுக பிரமுகர் கே. எஸ். ராதாகிருஷ்ணன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதிமுகவின் அரசியல் பயணத்தை “மகன் திமுக” என்று சாடியுள்ளார் வைகோவின் 30 ஆண்டுகால அரசியல் முடிவுகளால் கட்சி தற்போது இந்த நிலைக்கு வந்து முடிவடைவதாகக் குறிப்பிட்டு, வைகோவின் பேச்சும் படிப்பறிவும் மட்டுமே ஒருவரை சிறந்த தலைவனாக்கி விடாது என்றும் விமர்சித்துள்ளார்

அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிடுகையில், “மறுமலர்ச்சி திமுக என்று தொடங்கி, மறுபடியும் திமுக என்று மாறி, தற்போது மகன் திமுக என முடிவுக்கு வருகிறது மதிமுக” என்று சாடியுள்ளார். அதோடு மட்டுமன்றி, “இன்று திமுகவை என்னவெல்லாம் சொல்லி வைகோ வெளியே வருகிறாரோ, அதையே சில வருடம் கழித்து தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) சொல்லி வெளியே வருவார்” என்று எதிர்காலக் கூட்டணி நகர்வுகளையும் சாடி எதிர்வுகூறியுள்ளார் . வைகோவிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன் போன்ற தியாகிகளின் ஆன்மாக்கள் இப்போதுதான் அமைதிபெறும் என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்