அதிமுகவில் அடுத்த ‘மெகா’ ட்விஸ்ட்…. சசிகலா, தினகரனுக்கு இபிஎஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச்?… போயஸ் கார்டனில் நள்ளிரவில் நடந்த அந்த ரகசிய மீட்டிங்…!

By Nanthini on ஆனி 22, 2026

Spread the love

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த கடுமையான பின்னடைவு, அக்கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த நிலையில், கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கட்சியின் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளதைக் சுட்டிக்காட்டி, பழைய ஆதரவு வட்டாரங்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுத்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றிக் கழகம் நோக்கி நகர்வதைத் தடுத்து, தொண்டர்களைத் தக்கவைக்க வேண்டிய அவசியமும் தலைமைக்கு உருவாகியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவின் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டு வருவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து தஞ்சாவூரைச் சேர்ந்த நிர்வாகி மகேந்திரன் உயிரிழந்த சம்பவம், எடப்பாடி பழனிசாமியை தீவிரமாகச் சிந்திக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் மூலமாக பிரிந்து சென்ற தலைவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்கான தூது அனுப்பப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசுகின்றன.

   

இதற்கிடையே, போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா தலைமையில் அவரது சகோதரர் திவாகரன், ஜெய் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய ஆதரவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. இதில், மீண்டும் அதிமுகவில் இணையும் பட்சத்தில் சசிகலாவுக்கு ‘அவைத்தலைவர்’ போன்ற உயர்மட்ட கௌரவப் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற விருப்பம் சசிகலா தரப்பில் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல், டிடிவி தினகரன் தரப்பிலும் துணைப் பொதுச்செயலாளர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் (MP) பதவி போன்ற முக்கிய பொறுப்புகள் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகளை ஏற்கும் வகையில், கட்சியில் கூடுதலாக பல துணைப் பொதுச்செயலாளர் பதவிகளை உருவாக்கும் புதிய திட்டமும் அதிமுக தலைமையின் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

   

அதிமுகவை மீண்டும் எழுச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல, சசிகலா-தினகரன் இணைப்புடன் சேர்த்து, கட்சியில் இளம் தலைமுறையினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் வெறும் வதந்தியா அல்லது அதிமுகவை மீட்டெடுப்பதற்கான உண்மையான அரசியல் வியூகமா என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும். எது எப்படியாயினும், இந்த அதிரடி நகர்வுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.