விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி..!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

தமிழக அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை 100% முழுமையாகச் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.75,000 வரை பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளின் கடன் தொகை முழுவதும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், இதர விவசாயிகளுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த அதிரடி பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 14.43 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியையும் பெரும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.