” அமெரிக்கா இல்லைனா இஸ்ரேலே அழிஞ்சிருக்கும்…!” – நெதன்யாகுவை அதிரவைத்த… டொனால்ட் ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை…!!

By Swetha on ஆனி 18, 2026

Spread the love

அமெரிக்காவின் ஆதரவும், குறிப்பாகத் தனது பங்களிப்பும் இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே எப்போதோ அழிந்திருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கத்தார் அமீருடன் இணைந்து பேசிய அவர், வேறு எந்த அமெரிக்க அதிபரும் செய்யாத உதவிகளைத் தான் இஸ்ரேலுக்குச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தமக்கு நல்ல உறவு இருந்தாலும், அவர் தற்போதைய சூழலில் கூடுதல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கியமான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவிருக்கும் வேளையில், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது ட்ரம்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் தாக்கிக் கொள்ளக் கூடாது என்று உடன்பட்டிருந்த நிலையில், பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாகக் கூறிய ட்ரம்ப், ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு தவறான முடிவை எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், தாங்கள் ஹிஸ்புல்லா தளத்தைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.

   

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் முழுமையடைய வேண்டுமானால், ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முற்றிலும் வெளியேற வேண்டும் என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நிபந்தனை விதித்துள்ளார். ஆனால், இக்கோரிக்கை ஒப்பந்தத்தில் இல்லை என அமெரிக்க அதிகாரி மறுத்துள்ளார். இதற்கிடையில், லெபனானில் தேவைப்படும் காலம் வரை தங்கள் படைகள் நீடிக்கும் என்றும், காஸா மற்றும் சிரியா விவகாரங்களிலும் தங்களின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.