“அழைக்காமலேயே வந்த 18 லட்சம் பேர்” இன்னும் பொறுத்திருந்து பாருங்க என்ன நடக்குன்னு..? மாஸ் காட்டும் அண்ணாமலை..!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள புதிய பாட்காஸ்ட்டில், தனது புதிய அரசியல் பயணம் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நல்லதொரு அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காகக் கடந்த ஜூன் 5-ம் தேதி தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, எந்தவித எதிர்பார்ப்புமின்றி இதுவரை 18 லட்சம் பேர் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் முறைப்படி அழைப்பு விடுக்காத நிலையிலும், இத்தனை லட்சம் மக்கள் தானாக முன்வந்து இந்த புதிய பாதையில் இணைந்துள்ளது தனக்கு நெகிழ்ச்சியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் நாட்களில் இன்னும் ஏராளமானோர் இந்த இயக்கத்தில் இணைய உள்ளதாகவும், இது ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் என்றும் அண்ணாமலை தனது பாட்காஸ்ட்டில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.