தமிழ் சினிமாவின் ‘இயக்குனர் இமயம்’ என்று போற்றப்படும் பாரதிராஜா அவர்கள், தனது 84-வது வயதில் சமீபத்தில் காலமானார். 1977-ல் ’16 வயதினிலே’ படத்தின் மூலம் அறிமுகமாகி, கிராமத்து மண்வாசனையை திரையில் தவழச் செய்த பெருமை இவருக்கு உண்டு. சிறந்த இயக்குனராக மட்டுமன்றி, சிறந்த நடிகராகவும் திகழ்ந்த இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அவரது மரணம் குறித்த சில சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
பாரதிராஜாவின் இறுதித் தருணத்தில் அவர் அனாதையாக விடப்பட்டார் என்றும், அருகில் யாரும் இல்லை என்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் மிகுந்த ஆவேசத்துடன் கருத்து தெரிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், “கடைசி காலத்தில் பாரதிராஜாவை அவரது குடும்பத்தினர் சரியாக கவனிக்கவில்லையா?” என்ற கேள்வியையும் எழுப்பியது. கங்கை அமரனின் இந்த எமோஷனல் பேச்சு திரையுலக வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியது.
தற்போது இந்த சர்ச்சைகளுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார். கங்கை அமரன் தங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர் என்பதால், அண்ணன் மீதான பாசத்தில் அவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகக் குறிப்பிட்டார். சம்பவத்தன்று பாரதிராஜாவின் மனைவி ஒரு வேலை நிமித்தமாக தேனி சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த உயிரிழப்பு நேரிட்டதாகவும், விஷயம் தெரிந்ததும் அவர் பதறிப்போய் சென்னை திரும்பியதாகவும் ஜெயராஜ் விளக்கமளித்தார். கங்கை அமரனிடம் இதுகுறித்து பேசி புரியவைத்துள்ளதால், தற்போது அனைத்துப் பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
