திமுகவில் தற்போதுள்ள 78 கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கையை 125-ஆக உயர்த்தி, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க கட்சித் தலைமை தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, இந்த புதிய பொறுப்புகளில் பட்டியல் சமூகத்தினர், பெண்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்காத சிறுபான்மைச் சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்கி, கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்த தலைமை விரும்புகிறது.
இருப்பினும், இந்த அதிரடி மாற்றத்தால் தங்களது செல்வாக்கும், அரசியல் அதிகாரமும் கைநழுவிப் போய்விடுமோ என்று தற்போதைய மூத்த தலைவர்கள் மற்றும் சீனியர் மாவட்டச் செயலாளர்கள் கடும் கவலையடைந்துள்ளனர். இதன் காரணமாக, தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களைப் பிரிக்கக் கூடாது என அவர்கள் கட்சித் தலைமைக்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டு வருவதால், அறிவாலய வட்டாரத்தில் தற்போதைய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
