பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று தனியார் பள்ளி இயக்குநர் சுகன்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு தாமதமாக வரும் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக் கூடாது என்றும் அவர் அனைத்து பள்ளிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பள்ளி இயங்கும் நேரத்தில் மாணவர்களை முறையற்ற காரணங்களுக்காக வீட்டுக்கு அனுப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி மாணவர்களை வெளியேற்றும் கல்வி நிறுவனங்கள் மீது மாவட்ட கல்வி அலுவலர் (DEO) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
