திடீர் டுவிஸ்ட்..! “மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட முடியாது”… பதவியை தூக்கியெறிந்த கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி..!!

By Soundarya on ஆனி 5, 2026

Spread the love

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், இனிமேலும் தனது மனசாட்சிக்கு எதிராகச் செயல்பட முடியாது என்ற காரணத்தைக் கூறி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனது அதிருப்திக்கான முதன்மைக் காரணம் குறித்து விளக்கிய அவர், பெங்களூரு மேம்பாட்டுத் துறையைத் தனக்கு வழங்குவதாகக் கட்சித் தலைமை இரண்டு முறை வாக்குறுதி அளித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்தத் துறை தனக்கு வழங்கப்படாமல் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டதால் தான் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

   

அமைச்சர் பதவியைத் துறந்த போதிலும், கட்சி மேலிடத்தின் மீது தனக்கு எந்தவிதக் கோபமும் இல்லை என்று ராமலிங்க ரெட்டி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அவர் காங்கிரஸ் கட்சியிலேயே சாதாரண சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) தொடர்ந்து நீடிக்கப் போவதாகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.