தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு… தமிழக அரசு HAPPY NEWS…. ரெடியா இருங்க மக்களே….!

By Nanthini on ஆனி 1, 2026

Spread the love

புதிய ரேஷன் அட்டைகள் (குடும்ப அட்டைகள்) தேவைப்படும் பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவித்துள்ளார். அண்மையில் ரேஷன் கடை ஒன்றில் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்ட போது, புதிய குடும்ப அட்டை பெறுவதிலும், பெயர்களைச் சேர்ப்பது மற்றும் முகவரி போன்ற விவரங்களை மாற்றுவதிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகப் பொதுமக்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர்.

மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர், இந்தக் குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில் தகுந்த மற்றும் தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்கள் தங்களின் ரேஷன் அட்டை தொடர்பான பிரச்சனைகளை எளிய முறையில் சரிசெய்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.