BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பேரில், அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உலகாணி, கல்லணை, அச்சங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாகவே, இதே போன்ற கனிமவள விதிமீறல் புகார்களின் கீழ் விருதுநகரில் 23 குவாரிகளையும், தென்காசியில் 18 குவாரிகளையும் மூட அமைச்சர் பிரபு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரை மாவட்டத்திலும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.