BREAKING: மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்.. CM அறிவிப்பு….!

By Nanthini on வைகாசி 28, 2026

Spread the love

கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக நீடித்து வருவதால், புதுச்சேரியில் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கத்திரி வெயில் முடிவடைந்த பின்னரும் வெயிலின் கொடுமை குறையாததால், மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 4-ஆம் தேதியே திறக்கப்பட உள்ளன. தமிழகத்திலும் இதே காரணத்திற்காகப் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.