தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்களது MLA பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த கையோடு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து அவர்கள் தங்களை TVK கட்சியில் முறைப்படி இணைத்துக் கொண்டனர்.
ஏற்கனவே அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து பலவீனமடைந்துள்ள சூழலில், இந்த முக்கிய நிர்வாகிகளின் விலகல் தவெக ஆட்சிக்கு மேலும் பலத்தையும் கூடுதல் அரசியல் செல்வாக்கையும் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த திடீர் ராஜினமாக்களின் காரணமாக, தமிழக சட்டப்பேரவையில் தற்போது காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளதுடன், பேரவையில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பெரும்பான்மை பலம் 115 ஆகக் குறைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
