தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் என்பவரைக் குற்றவாளி என போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய இக்கொடூரச் சம்பவம் நடந்து, வெறும் இரண்டே மாதங்களுக்குள் வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு, குற்றவாளிகளுக்கு விரைவான நீதி மூலம் தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
