“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

By Soundarya on வைகாசி 24, 2026

Spread the love

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்களுக்காக இந்த அம்மா மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மருந்தகங்களின் பெயர் ‘முதல்வர் மருந்தகம்’ என மாற்றப்பட்டு, அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்ததாக பாப்புலர் முத்தையா சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தொடர்ச்சியாக, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் புகைப்படங்களை இந்த மருந்தகங்களில் உடனடியாக வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் நலத்திட்டங்களில் தற்போதைய ஆட்சியாளர்களின் அடையாளங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்ற அரசியல் நடைமுறையின் அடிப்படையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.