BREAKING: 16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

By Soundarya on வைகாசி 22, 2026

Spread the love

தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இடமாற்றத்தின்படி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சந்தியா வேணுகோபால் சர்மாவும், வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழில்துறை ஆணையராக சில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் ஜவுளித்துறை ஆணையராக ஷோபனா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் மாவட்ட ஆட்சியா்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கரூர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியராகப் பணிபுரிந்த ரவிக்குமார், தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்கவுள்ளார். நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தவும், அரசுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் இந்த முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.